அரச ஊழியர்கள் ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் எங்களுடைய கியருக்கு இன்னும் மாறவில்லை என்பது உங்களுக்கு தெரியும் .நாங்கள் மெது மெதுவாக கியரை மாற்றிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கின்றோம்.இன்னும் சில அரசியல் ஊழியர்கள்...
வாஸ் கூஞ்ஞ
மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை பங்கில் மறைக்கல்வி வாரத்தின் இறுதிநாளில் திருப்பலியுடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கத்தோலிக்க திருஅவையானது இவ்வருடம் செப்படம்பர் மாதம் 14 ந் திகதி தொடக்கம் 21ந் திகதி வரை தங்கள்...
வாஸ் கூஞ்ஞ
வங்காலை மன்.புனித ஆனாள் வித்தியாலயத்தில் நீண்ட காலத்திற்குப் பின் முத்தமிழ் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மன்.புனித ஆனாள் வித்தியாலயதிற்கு அன்மையில் புதிய அதிபராக சி.எஸ்.சிவகுமார் நியமனம் பெற்றபின் இப்பாடசாலையில் மாணவர் பாராளுமன்றம்...
ஊடகவியலாளரின் பார்வையில்…..
தாயகத்திற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளை மையமாகக் கொண்ட உண்மைச் சம்பவம் ஒன்றை கருப்பொருளாக வைத்து தாயகம் காரைநகரைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் சுதாகரன் அவர்கள் இயக்கிய "மௌனித்தபொழுது" முழுநீளத் திரைப்படம் கடந்த...
அக்கரப்பத்தனை, ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையொன்று, நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
சிறுத்தையை கண்ட பொதுமக்கள் அது பற்றி அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கற்பாறை நீர் தேக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை, மூன்று மணிநேர போராட்டத்துக்கு மத்தியில் மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த ரந்தெனிகல மிருக வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வைத்திய பரிசோதனை மேற்கொண்டு சிறுத்தையின் பின் கால் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இதனை சிகிச்சைக்காக உடவலவ தேசிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
சுமார் 6 வயதுடைய ஆண் சிறுத்தை என நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உரிய சிகிச்சைகளின் பின்னர் சிறுத்தை வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.