மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஏனைய...
எப்.முபாரக்
திருகோணமலை ,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் (16) அதிகாலை உட்பகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது.
இதன்போது வீடு சேதமாகியுள்ளதுடன் வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் மற்றும் மின்சார இணைப்புக்களையும்...
பாறுக் ஷிஹான்
பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம்...
பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவிப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ எதிர்காலத்தில் இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான்...
(ஏறாவூர் நிருபர்)
ஜேர்மன் நாட்டில் வசித்து வரும் இலக்கியவாதி சந்திரகௌரி சிவபாலன் எழுதிய “குருவிக்கூடு” எனும் நூல் வெளியீட்டு விழா ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் சுதாகரி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் புளோரன்ஸ் பாரதி கென்னடி இ மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் பிரதிநிதி கே.தியாகராஜா இ கிரான் பிரதேச செயலாளர் க.சித்திரவேல் இ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் கலாநிதி தம்பிராஜா ஈஸ்வரராஜா மற்றும் சமூக இ சமய முக்கியஸ்தர்கள் கலைஞர்கள் என பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இந்தியா இ சென்னை மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கொள்ளுப்பெயர்த்தி டாக்டர் உமாபாரதி மற்றும் இந்தியா இ புதுச்சேரி முனைவர் வே. பூங்குழலி பெருமாள் ஆகியோர் நூலுக்கான நயவுரை வழங்கினர்.
நூலாசிரியரின் சகோதரர் வேலுப்பிள்ளை ரவிநாதன் பிரதம அதிதிக்கு நூலின் முதல் பிரதியைக் கைளித்தார்.
தமிழ் வானவை நிறுவுனரான எழுத்தாளர் சந்திரகௌரி சிவபாலன் மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஆரம்பகாலத்தில் ஆசிரியராக மற்றும் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகராகப் பணியாற்றிய இவர் கடந்த சுமார் முப்பது ஆண்டுகாலமாக ஜேர்மன் நாட்டில் வசித்து வருகிறார்.
இவர் கட்டுரைத் தொகுப்புக்களாக முக்கோண முக்குளிப்புஇ நான் பேசும் இலக்கியம் ஆகியவற்றுடன் என்னையே நான் அறியேன் மற்றும் குருவிக்கூடு ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.
மேலும் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்ற சிறுகதைத் தொகுப்பையும் பனிக்குடம் கவிதைத் தொகுப்பினையும் எழுதியுள்ளார்.
விழாவில் கலந்துகொண்டவர்களிடமிருந்து எவ்வித அன்பளிப்புக்களையும் பெற்றுக்கொள்ளாது இலவசமாக நூல்கள் கையளிக்கப்பட்டன. ...