சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் நுவரேலியா கிறஹரி ஏரி

( வி.ரி. சகாதேவராஜா)

அண்மைக்காலமாக மலையக சுற்றுலாவில்
நுவரேலியா கிறஹரி ஏரி சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் பிரதான மையமாக திகழ்கிறது.

தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாவிகள் அங்கு செல்கின்றனர்.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அங்குள்ள பனிமூட்டம் குளிர்கால சூழ்நிலை லேசான தூறல் என்பன சகலதரப்பினரையும் கவர்ந்திழுக்கின்றது.

குறிப்பாக படகுச்சவாரி, ஜெற் அதிவேக படகுச் சவாரி ,குதிரைச் சவாரி என்பனவும் சிற்றூண்டிகளும் பலரையும் கவர்ந்திழுக்கின்றன.