நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சை தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (05) நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தற்போது நிலவும் மழைக்கால வானிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில், பரீட்சை நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.