( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில், சித்தருள் சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் பவள விழாவையொட்டி இன்று(21) செவ்வாய்க்கிழமை பகல் கோமாதா பூஜை மற்றும் மகா யாகம் என்பன நடைபெற்றன.
அதற்கு முன்னதாக நேற்று திங்கள்கிழமை(20) சித்தரின் சப்பற ஊர்வலம் இடம்பெற்றது.
அதேவேளை பவளவிழா குருபூசையும் அன்னதானமும் நாளை 22ஆம் திகதி (புதன்கிழமை) சிறப்பாக நடைபெறவுள்ளது.


