கடுவல, நவகமுவ- வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞர் ஹோமாகம மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனை தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.
குறித்த இளைஞர் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கான பின்னணி போதைவஸ்து வர்த்தகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


