பிரான்ஸ் தலைநகர் பரீசில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வானது பிரான்சின் பரிஸ் நகரில்  புலம்பெயர் தமிழ் சமூகத்தினரின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (18) மாலை நடைபெற்றது.

முள்ளிவாய்க்காலில் நடந்த ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்திருந்த இந் நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காகத் தமிழ் தேசம் தொடர்ந்து விடுத்துவரும் கோரிக்கைகளுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும் பங்கேற்பாளர்கள் ஒன்றுகூடினர். மலர் அஞ்சலிகளும் நினைவு அனுசரிப்புகளும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அமைந்தன.
தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு சர்வதேசப் பொறுப்புக்கூறலுக்கான தொடர்ச்சியான கோரிக்கைகளிலும் அடுத்த தலைமுறையின் பங்கை மாணவர்கள் மற்றும் இளைஞர் கலைஞர்களின் பங்கேற்பு எடுத்துக்காட்டியது.
இந்த மாதம் வடக்கு கிழக்கு  மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் நடைபெறும் பரந்த நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பிரான்சில் நடைபெற்ற நினைவுகூரல்கள் அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.