( காரைதீவ நிருபர் சகா)
காரைதீவு பிரதான வீதியோர வடிகான்கள் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களால் நிரம்பியுள்ளதால், சிறியளவிலான மழை பெய்தால்கூட வெள்ளநீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் பிரதான வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக மழைக்காலங்களில் வடிகான்களில் நீர் சரிவர ஓடாத காரணத்தால், மழைநீர் வீதியில் தேங்கி வெள்ளப்பெருக்கு நிலை உருவாகுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நீண்டகாலமாக வடிகான் சுத்திகரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை , மூடிகளுமில்லை என குற்றஞ்சாட்டும் பிரதேச மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வடிகான்களை சுத்தம் செய்து, நிரந்தர தீர்வை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, காரைதீவு பிரதான வீதியின் பராமரிப்புக்கு பொறுப்பான கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை இவ்விடயத்தில் அவசர கவனம் செலுத்தி மக்களின் அசௌகரியங்களுக்கு தீர்வு வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


