தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று இடம்பெற்றது. வாகனப் பேரணியுடன் தியாக தீபம் திலீபனின் படங்கள் பறிக்கப்பட்டு உணர்வு பூர்வமான அஞ்சலியும் இதன்போது செலுத்தப்பட்டது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் மாவட்ட கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்துரைத்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் 1987ல் இந்திய இராணுவம் ஈழ மண்ணில் அமைதிப்படை எனும் பேரில் கால் பதித்த போது தமழ் மக்களுடைய பாதுகாப்புக்காக ஆயுதங்களை கையில் வைத்திருந்த தமிழ் ஈழ விடுதலை புலிகள் இந்திய அரசு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் ஆயுதங்களை இந்திய படையிடம் கையளித்தார்கள்.அதன் மூலமாக தமிழ் மக்களுடைய பாதுகாப்பை இந்திய பொறுப்பேற்றது.அதன் பின்ரர் சிங்கள பௌத்த பேரிரவாத ஆட்சியாளரின் தலைமையில் தமிழர்களுக்கு எதிராக படைகளை வைத்து ஒடுக்கு முறைகளை கொண்டு வந்தார்கள்.
குறிப்பாக அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் ஊர்காவற் படைகளை வைத்து எங்கள் மக்களை சித்திரவதை செய்து அடித்து விரட்டி கடத்தி நிலங்களை கபளீகரம் செய்து தீவிரமான முன்னெடுத்த நிலையில் விடுதலை புலிகள் தமது ஆயுதங்களை இந்திய படையிடம் கையளித்திருந்த வேலையில் எங்கள் மக்களை பாதுகாக்க வேண்டும் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் ஒற்றையாட்சி தீர்வு தமிழர்களை பாதுகாக்காது ஆகவே வடகிழக்கில் இடைக் கால நிருவாகம் ஏற்படுத்தி தர வேண்டும்அப்போது ரஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இடைக்கால நிருவாகத்தை ஏற்படுத்தி தருவதாக புது டில்லியில் வைத்து பிரபாகரனிடம் வாக்குறுதியளித்திருந்தார்.அவ்வாறான வாக்குறுதிகளின் போது தான் அட்டூழியங்களை நிறுத்தி பாதுகாப்பான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் கையில் ஆயுதம் இல்லாத புலிகள் தங்களுடைய உயிர்களை பணயம் வைத்து எங்களுடைய மக்களை பாதுகாப்பதற்காக போராட்டமாக உண்ணா நோன்பு போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
அந்த வகையில் யாழ் மாவட்ட அரசிதல் துறை பொருப்பாளராக இருந்த திலீபன் அண்ணா அவர்கள் வெறும் 23 வயதை நிரம்பியிருந்தவர் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகிய மாணவராகவும் இருந்தவர். இந்த போராட்டத்தில் குதித்தார். 12 நாட்கள் ஒரு சொட்டு தண்ணீரும் குடிக்காமல் ஒரு பிடி உணவருந்தாமல் மக்களுடைய பாதுகாப்பிற்காக மக்களுடைய அட்டூழியங்களை எதிர்த்து இருந்தவர். இந்திய படைகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க 12 நாட்கள் துடி துடியாய் துடித்து உயிரை துறந்தார்.38 ஆண்டுகள் கடந்தும் இந்திய ஒற்றையாட்சிக்குல் 13ம் திருத்தத்தை தீர்வாக திணிக்கின்றனர்.
அதற்காக தமிழ் சமூகத்தில் அக்கரை இல்லாதவாறும் 13யை வலியுறுத்துகின்றது.தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் .சமஷ்டி தீர்வை பெற்றுத் தர இந்திய அரசு முன்வர வேண்டும். இனப்படுகொலைக்கான தீர்வு உடனடியாக குற்றவியல் விசாரனையும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என சர்வதேசத்திடமும் இந்தியாவிடமும் கேட்டு கொள்கிறோம் என்றார்.


