பெரிய கல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் பவள விழா நிகழ்வு

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் 75ஆவது பவள விழா நிகழ்வானது வித்தியாலயத்தின் முதல்வர் வி.புவிவாணன் அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(31) மாலை 3.30 மணிககு நடைபெற்றது.

நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர்.சி.சிறிதரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், ஆன்மீக அதிதிகள்,பழைய மாணவர்கள்,வித்தியாலயத்தில் முன்னர் கடமையாற்றிய அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது 75 ஆவது பவள விழா நினைவுத்தூபியானது பிரதம அதிதியின் கரங்களினால் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் பிரதம அதிதி பாடசாலைச் சமுகத்தினரால் பொன்னாடை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் திறமைகாட்டிய மாணவர்கள் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.நிகழ்வுக்கான நிதியுதவியினை அவுஸ்ரேலியா வாழ் பெரிய கல்லாறு தடம் அறக்கட்டளை அமைப்பின் ஸ்தாபகர் இராசலிங்கம் நிறஞ்சன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.