ரயில் ஊழியர் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பமாகியுள்ளது.
தற்போதைய புகையிரத பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருகின்ற போதிலும் அனைத்து ரயில்களும் தற்போது அட்டவணைப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியாட்சகர் தெரிவித்துள்ளார்.


