( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் (12) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இம்முறை வழமைக்கு மாறாக கிழக்கின் பல பாகங்களிலுமிருந்து
ஆயிரக்கணக்கான அடியார்கள் பாதயாத்திரை மேற்கொண்டு ஆலயத்தை அடைந்தார்கள் .
அருகில் மகாவலி நதியில் நீராடி முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
ஏராளமான கடைத் தெருக்கள் உள்ளன.
எதிர்வரும் 25 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.


