கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து வாழ்க்கைக்கு விடைகொடுக்கிறாரா

கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு பருவத்தின் முடிவில் தொழில்முறை கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.

41 வயதான போர்த்துக்கல் அணியின் தலைவர், தனது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான கால்பந்து பயணத்தை நிறைவு செய்யும் வகையில், எதிர்வரும் ஆண்டே தனது விளையாட்டு வாழ்க்கையின் இறுதி ஆண்டாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

“இது எனது கால்பந்து வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கலாம். நான் ஒரு சிறப்பான மரபை விட்டுச் செல்ல விரும்புகிறேன்” என அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கழக மற்றும் நாட்டுக்காக இதுவரை 976 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ, வரலாற்றில் 1,000 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 24 கோல்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

2002ஆம் ஆண்டு Sporting CP அணியுடன் தனது கால்பந்து வாழ்க்கையைத் ஆரம்பித்த ரொனால்டோ, பின்னர் Manchester United, Real Madrid மற்றும் Juventus அணிகளுக்காக விளையாடினார்.

தற்போது சவூதி புரோ லீக் அணியான Al-Nassr அணிக்காக விளையாடி வருகிறார்.

ஓய்வு பெறுவது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்ட அவர், கால்பந்திலிருந்து விலகிய பின்னர் அதிகமாகப் பயணம் செய்வது, விளையாடுவது மற்றும் வாழ்க்கையை அனுபவிப்பதில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ரொனால்டோ, தனது இறுதி பருவமாக இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் 1,000 கோல்கள் என்ற வரலாற்று சாதனையை எட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.