பகமூண, தமன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் பின்னால் பயணித்த பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 63 வயதுடைய பெண்ணொருவரும் அவரது 43 வயதுடைய மகனும் ஆவர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 09 வயதுடைய ஆண் குழந்தையொன்று காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நாளை (11) ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


