கடந்த 13 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 14,572 ஆக உயர்வு!

ஜூலை மாதத்தின் கடந்த 13 நாட்களில் மாத்திரம் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 14,572 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 69,951 என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.