இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல சுற்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்கு மேல் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

காற்று தென்மேற்கு திசையில் வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு (30-40) கி.மீ. ஆக இருக்கும்.

காலி முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

திருகோணமலை முதல் காலி வரை காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

கடலின் நிலை:

காலி முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும்.

திருகோணமலை முதல் காலி வரை காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் அவ்வப்போது ஓரளவிற்கு கொந்தளிப்பாக இருக்கும்.

கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் (2.0 – 2.5) மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த சூறாவளிக் காற்றும், மிகவும் கொந்தளிப்பான கடலும் எதிர்பார்க்கப்படலாம்.