பத்து இலட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகளின் வருகை!

இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சம் (1 மில்லியன்) எல்லையைத் தாண்டியுள்ளது.

அதன்படி, கடந்த காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,010,807 என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மே மாத ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 134,530 எனவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.