தலாவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எப்பாவல பகுதியில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் 5 மாணவர்கள் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதே பாடாசலையில் தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, காயமடைந்த தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் அனைவரும் இலகுவான காயங்களுடன் எப்பாவல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல் நடத்தியவர் அதே பாடசாலையில் தரம் 12 அறிவியல் பிரிவு மாணவர் ஆவார்.
சந்தேக நபர் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


