யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
பருத்தித்துறை வீதியில் கோப்பாய் நாவட்கட்டு பகுதியில் இன்று அதிகாலை உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த உந்துருளியில் பயணித்த 22 மற்றும் 24 வயதான இரண்டு இளைஞர்களும், காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
நெல்லியடி பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


