( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் திருக்கோவில் பிரதேச திருவிழா நேற்று ம (24) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது .
நாளை 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி இடம் பெற ஏற்பாடாகி உள்ளது. ஆலயத்தில் தேவையான பால் வழங்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
உற்சவகால பிரதம குரு வித்யா பிரவீணா சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் , ஆலய குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் சமுகத்தில் வருஷாபிஷேக கிரியைகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்ச்சியாக ஒன்பது தினங்கள் பகல் அலங்கார உற்சவ திருவிழாக்கள் இடம் பெற்று எதிர்வரும் 01ஆம் தேதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி அன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது .
இன்று 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி இடம் பெற ஏற்பாடாகி உள்ளது.
இந்த பத்து நாள் அலங்கார உற்சவ திருவிழாக்காலங்களில் காலை 10 மணிக்கு கும்ப பூஜையுடன் ஆரம்பமாகி பகல் ஒரு மணிக்கு அலங்கார உற்சவ பிரதான பூஜை, அம்பாளின் வீதியுலா இடம் பெறும். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படும் என ஆலய பரிபாலன சபை தலைவர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.



