இலங்கையின் மொத்த சனத்தொகையில் 41.8 சதவீதமானோர் திருமணமாகாதவர்கள் எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை மற்றும் வீட்டுத் தொகைமதிப்பு ஆய்வின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் சமூகவியல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சாந்தனி விஜேபண்டார குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், திருமணமாகாதவர்களின் எண்ணிக்கை தற்போதைய தரவுகளின்படி கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


