காட்டு யானை தக்குதலில் நால்வர் பலி!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

எப்பாவல, கெலேஅமுணுகொலய பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், ஹுரிகஸ்வெவ பகுதியிலும் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தனமல்வில – ஹம்பேகமுவ பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு காட்டு யானைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.