78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு!!

78 வது சுதந்திர தின வாரத்தினை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா மற்றும் முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (03) சிரமதான நிகழ்வுகள் இடம் பெற்றன.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட செயலகத்தின் அணைத்து பிரிவுகளிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களினால் சிரமதான நிகழ்வு இடம் பெற்று வருகின்றது.

புதிய மாவட்ட செயலகத்தில் காணப்படும் பற்றைகள் இதன் போது துய்மைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.