எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையமானது ஹிஜ்ரா நகர், தியாவெட்டுவான் பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாடுச்சபையின் பணிப்பாளர் நாயகம் கே.கே.எஸ் கொத்தலாவல பங்கு பற்றுதலுடன் போதைப்பொருள் முற்தடுப்பு மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் ஏற்பாட்டில் இன்று (19) திறந்து வைக்கப்பட்டது
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான “முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் போதைப்பொருள் பாவனையினால் பாதிப்புக்குள்ளாகிய நபர்கள…
[16:40, 19/01/2026] Mayuran In4: மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா!!
அரச உத்தியோத்தர்களுக்கான 100,150 மணித்தியாலங்களை கொண்ட இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் மாநகரசபை நகர மண்டபத்தில் இன்று (19) இடம் பெற்றது.
சிங்கள பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்று மங்கள விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது 100, 150 மணித்தியால கற்கை நெறியினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களினால் கண்கவர் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்திருந்தன.
நாடளாவிய ரீதியில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இக் கற்கைநெறியில் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் இக்கற்கைநெறியினை பூர்த்தி செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் பயிற்சி நெறியின் வளவாளர்களான திருமதி.கே.திலினி மதுசிகா, செல்வி கே. சஹானா ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அதிதிகளினால் கற்கை நெறியினை பூர்த்தி செய்த நபர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதற்கு இக்கற்கை நெறி அரச உத்தியோத்தர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


