கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் ஏ. ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறப்பும், ஸ்மார்ட் போர்டு வழங்கும் சிறப்பு நிகழ்வும்

நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் “ஸ்மார்ட் போர்ட்” கையளிக்கும் சிறப்புவிழா இன்று (06) பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக பங்கேற்றதுடன்,
கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளருமான அஸ்மா அப்துல் மலீக் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், ஏ.ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறந்து வைக்கப்பட்டதுடன், ஸ்மார்ட் போர்ட் உத்தியோகபூர்வமாக ரஹ்மத் மன்சூர் அவர்களினால் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.

இந்த சிமாட் டீவி வழங்கும் செயற்பாட்டிற்கு ஒரு மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் டீவியை ரஹ்மத் மன்சூர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்வு, மாணவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு ஒரு புதிய திசையைத் தரும் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், ரஹ்மத் பவுண்டேசனின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.