குச்சவெளி பிரதேசத்தில் குகதாசன் எம்பியால் நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் வடிந்துள்ள சூழலில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளது.நோய் தொற்றுக்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. இவற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டாக, திருகோணமலை ,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கல்லம்பத்தை, கட்டுக்குளம், செந்தூர் கிராம அலுவலக பிரிவில் வதியும் அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார்கள் ,பாலுட்டும் தாய்மார்கள், ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்கள்,முதியோர்கள் ஆகியோருக்கு இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்களால் நுளம்பு வலைகளும் சுகாதாரப் பொருட்களும் இன்று(15.12.2025) திரியாய் மகா வித்தியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.