ஒன்லைன் மூலம் ரூபாய் 45000 மோசடி-20 வயது இளைஞன் கைது

பாறுக் ஷிஹான்

ஒன்லைன் மூலம் ரூபாய் 45000 பெறுமதியான பொருளை கொள்வனவு செய்து உரிய பணத்தினை வழங்காமல் தப்பியோடிய இளைஞனை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஒன்லைன் மூலம் கொள்வனவு செய்த பொருளை பெற்றுக்கொண்டு அதற்குரிய பணம் வழங்காது இளைஞன் தப்பி ஓடியதாக கடந்த புதன்கிழமை (20) முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டலில் செயற்பட்ட பல்வேறு முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்மாந்துறை 01 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.

இதன் போது கைதான இளைஞனிடம் இருந்து ஒன்லைன் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றும் பொருள்கள் இன்று (22) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கைக்காக ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.