(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபாவின் ஏற்பாட்டில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் தலைமையில் நேற்று (29) செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாஸித், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல். மாஹிர், பிரதேச சபை உறுப்பினர்கள், உதவி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள், முப்படையினர், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியோக செயலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


