குழந்தைகளுக்கு போசணை நிறைந்த சீரான உணவை வழங்குவது அவர்களின் உடல் மற்றும் மூளையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் மிகவும் முக்கியமானது.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

● குழந்தைக்கு ஒரு நாளைக்கு 3 பிரதான உணவு வேளைகளும் 1 அல்லது 2 சிற்றுண்டி வேளைகளும் கொடுப்பது பொருத்தமானது.

● குழந்தைகளின் சிறிய பசிக்கு சிறு வயதிலிருந்து அதிக சீனி மற்றும் உப்பு சேர்த்து தயாரிக்கப்பட்ட பிஸ்கட்,கேக், வெதுப்பக உற்பத்திகள், நொறுக்குதீனி, இனிப்புப் பானங்கள், மிட்டாய், சோக்கலேட் போன்ற உணவுகளைக் கொடுக்காதிருப்போம். ஏனெனில், சீனி மற்றும் உப்பு சுவைக்கு குழந்தைகள் அடிமையாகி விடுவார்கள்.

● சிறிய பசி வேளைக்கு அவித்த மரக்கறிகள், பழங்கள், சோளம், அவித்த விதை வகைகள், தயிர், நிலக்கடலை, வீட்டில் தயாரித்த இயற்கையான பழச்சாறு போன்ற போசாக்கான உணவை வழங்குவோம்.

● குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்க்காமல் உணவின் இயற்கையான சுவைகளை அடையாளம் காண எப்போதும் வாய்ப்பளிப்போம்.

● குழந்தைகளின் நாளொன்றுக்கான உணவு வேளையில் 02 மரக்கறிகள், 02 பழங்கள் மற்றும் ஒரு கீரை வகைகளை உள்ளடக்குவதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு, உடல் வளர்ச்சிக்கு போலவே நோய்களிலிருந்து பாதுகாப்படையவும் அவர்களுக்கு உதவி செய்வோம்.