ஆரையம்பதியில் எல்- நினோ காலநிலை மாற்றம் மற்றும் எதிர்கொள்ளவிருக்கும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலைக்கு தயார் படுத்தல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் எல்-நினோ காலநிலை மாற்றம் மற்றும் எதிர்கொள்ளவிருக்கும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை என்பவற்றுடன் தொடர்புபட்ட அனர்த்தங்களுக்கான முன்னயத்தங்கள் தொடர்பான கூட்டம் நேற்று 2026.08.19 மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது எல்-நினோ தொடர்பாகவும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் முன்னாயத்தங்கள் தொடர்பிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநியுடனான முன்னாயத்தங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டதுடன் அனர்த்த முன்னாயத்தங்கள் தொடர்பாக துறைசார் திணைக்களங்களுடனான விசேட கலந்துரையாடலும் நடைபெற்றது.

இதில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உட்பட அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கிய பிரதானிகளும் கலந்து கொண்டனர்.