அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு, மொத்தமாக 9,241,892,500 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.
அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு, 2,321,735,000 ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


