தம்புள்ளை கோர விபத்தில் இளைஞன் பலி!

தம்புள்ளை, வெலிஹேன புலாகல வீதியின் வெலிஹேன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புலாகல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்தின் மதிலில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, காலி – உடுகம வீதியின் கல்கொடதெனிய சந்தியருகே இடம்பெற்ற விபத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பேருந்து நிறுத்தத்தில் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்து சென்றவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் உடுகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார்.

அக்மீமன பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.