சி.ஐ.டியிலிருந்து வௌியேறிய எஸ்.டி.ஐ.ஐி வருண ஜயசுந்தர

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே இவ்வாறு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்பினராக சந்தேகிக்கப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடன் பேணியதாகக் கூறப்படும் சில தொடர்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்வதற்காகவே வருண ஜயசுந்தர இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.