(வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சபம் மற்றும் தீமிதிப்பு வைபவத்தின் ஒன்பதாம் நாள் திருச்சடங்கின் சக்தி மஹா யாக பூசை நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
பிரபல சிவாச்சாரியார் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் மஹா யாகம் நடைபெற்றது.
ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


