வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிரோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே, கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தவலந்தன்னை – பூண்டுலோயா வீதியின் வெளிக்கண்டிய என்ற இடத்தில் கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக, அந்த வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.