சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (04) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
வெளிநாட்டு செய்திகளின்படி, உலக சந்தையில் அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,457.26 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 73.44 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இலங்கையின் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.
இந்த நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை வீழ்ச்சி காரணமாக, இன்றையதினம் இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


