நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் இன்று (13) அதிகாலை முதல் அடர்ந்த மூடுபனி நிலவுகிறது.
இதன் காரணமாக அவ்வீதியிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் மற்றும் அதன் கிளை வீதிகளிலும் இவ்வாறான அடர்ந்த மூடுபனி நிலை காணப்படுகிறது.
எனவே, அவ்வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு, மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் ஓட்டுநர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


