யாழ்ப்பாணத்தில் உடல்நலக் குறைவால் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் ரீ. சத்தியமூர்த்தி எமது செய்திச் சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார்.
குறித்த சிறுமிக்கு கடந்த 13 ஆம் திகதி வயிற்று வலியுடன் வாந்தி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த சிறுமிக்கு குடல்வளரி அழற்சி தாக்கம் (Appendicitis) என்ற சந்தேகத்தில் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.


