ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப்பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (09) புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தை தரவுகளின்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,721.52 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.

தங்கத்தைப் போன்றே வெள்ளியின் விலையிலும் இன்று கணிசமான ஏற்றம் காணப்படுகிறது.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,721.52 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 73.55 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி,

மத்திய கிழக்கு போர்ச் சூழலால், பிராந்திய ரீதியான அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி நகர்வது இந்த விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும், சர்வதேச ரீதியில் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதுடன், சர்வதேச நாடுகளுக்கிடையிலான அரசியல் ரீதியான தீர்மானங்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கை மாற்றங்கழும் இதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.

இருப்பினும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொலரின் பெறுமதி மற்றும் சர்வதேச விலை மாற்றங்கள் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாலைக்குள் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.