எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் செயற்பட்டு வரும் 14 அறநெறி பாடசாலைகளுக்கான நூல்களை வழங்கும் நிகழ்வு (31) உதவி பிரதேச செயலாளர் கி. இளம்குமுதன் தலைமையில் நடைபெற்றது.
அறநெறிப் பாடசாலைகளுக்காக இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடந்தோறும் வழங்கப்படும் நூல்களில் 27 வகையான நூல்கள் உதவிப் பிரதேச செயலாளரினால் அறநெறிப் பாடசாலைகளுக்கு கையளிக்கப்பட்டன.


