( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவும், மனித அபிவிருத்தி தாபனமும் , ஹந்தானை தோட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய சர்வதேச பெண்கள் தின விழா இன்று (8) ஞாயிற்றுக்கிழமை இன்றையசர்வதேச மகளிர் தினத்தில் ஹந்தானை தோட்டத்தில் சிறப்பாக
நடைபெற்றது.
மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைமை இயக்குநர் “வீர வனிதையர்” விருது பெற்ற திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம், பிரதம இணைப்பாளர் பி. ஸ்ரீ காந்த் ஆகியோருட்பட பல அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
ஹந்தானை தோட்ட உட்பகுதியில் நடைபெற்ற நிகழ்வு என்பதால் இது முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்த பெண்கள் தினத்தில் குறிப்பாக 25 க்கு மேற்பட்ட தொழிலாளர் அமைப்பு பெண்களும், தோட்ட பெண்களும் இணைந்து ஏற்பாடு செய்தார்கள் .


