இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலதிக தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இலங்கை விமானப்படை ஒரு விமானத்தை சம்பவம் நடந்த பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், இன்று (04) நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், விபத்து நடந்தபோது கப்பல் இலங்கை கடல் பகுதியில் இல்லை என்று குறிப்பிட்டார்.
கப்பல் மூழ்குவதாக கடற்படைக்கு வந்த பேரிடர் அழைப்பின் அடிப்படையில், மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டன என்பதையும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.


