ஆளுனர் தலைமையில் துறைசார் மதிப்பீடு கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்_

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் துறை சார்ந்த மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம் நேற்று (05) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் திருகோணமலை மாகாண கல்வி திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சகமும் அமைச்சகத்துடன் இணைந்த நிறுவனங்களான மாகாண விளையாட்டுத் திணைக்களம், பண்பாட்டுத் திணைக்களம், மாகாண முன்பள்ளி பிரிவு ஆகியவற்றின் முன்னேற்ற நிலைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குகநாதன் , கிழக்கு மாகாண கல்வி திணைக்கள மாகாண பணிப்பாளர், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாண பணிப்பாளர், கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்கள மாகாண பணிப்பாளர் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.