புனித மிக்கேல் கல்லூரியில் தரம் ஒன்று மாணவர்களுக்கான கால்கோல் விழா!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

2026 ஆண்டு புனித மிக்கேல் கல்லூரியில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் காள்கோள் விழா இன்று (29) மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.

புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அன்டன் பெனடிக் ஜோசப் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு புனித மிக்கேல் ஆரம்ப பிரிவிற்கான உப அதிபர் வணக்கத்திற்குரிய மெருசன் கென்ரிக் கலந்து கொண்டனர்.

அதிதிகளுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மங்கள விளக்கேற்றலுடன் மும்மத இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

டச்பார் இன்னாசியர் ஆலய பங்கு தந்தை அருட்பணி யூட் டிலக்சன் அவர்களினால் புதிய மாணவர்களுத்தான ஆசிர்வாதமும் சிறப்புறையும் இடம் பெற்றது.

இதன்போது தரம் ஐந்து மாணவர்களின் வரவேற்பு நடனம் உள்ளிட்ட ஏனைய ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்ததுடன், பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளின் உரையினைத் தொடர்ந்து ஆரம்பப் பிரிவு கட்டடத்தொகுதிக்கு புதிய மாணவர்கள் பாடசாலையின் பாண்ட்டு வாத்திய மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் போது புனித மிக்கேல் கல்லூரியில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் தரம் இரண்டில் கல்விகற்கும் மாணவர்களால் மாலை அணிவித்து மகிழ்வுடன் வரவேற்கப்பட்டனர்.

நீண்டதொரு வரலாற்றுப் பின்ணனியை கொண்ட பல சாதனைகளை தன்னகத்தே கொண்ட புனித மிக்கேல் கல்லூரியில் தரம் ஒன்றிற்கான புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவச்செல்வங்களால் இந்நாள் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாக அவர்களது மனங்களில் நிலைத்து நிற்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க தலைவர் அருட் தந்தை நவரத்தினம் அடிகளார், அருட் தந்தை யோசப் மேரி, புனித மரியாள் போராலய பங்கு அருட்தந்தை லெஸ்லி ஜேகாந்தன், அருட் தந்தை மேருசன், அருட் தந்தை அனிஸ்டன் முராயஸ், அருட் தந்தை வின்ஸ்டன் ரோசைரோ, கல்லூரியின் முன்னால் பிரதி அதிபர் ஸ்டிபன் மத்தியு, அருட் தந்தை சுகந்தன் அடிகளார், பிரதி அதிபர் ஆர்.எஸ்.எஸ்.ஆர் டேசி ஸ்பக்,
பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.