டெங்கு கிண்ணியாவில் ஓர் அனர்த்தமாக மாறும் அபாயம்

உயிர் கொள்ளி நோயான டெங்கு கிண்ணியாவில் ஓர் அனர்த்தமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பு வளருவதற்கான வாய்பான சூழலை வைத்திருப்போர் எவராக இருந்தாலும் அவர்கள் மீது நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தாக்கல் செய்வதற்கு கிண்ணியா நகர சபையின் தவிசாளர் என்கின்ற அடிப்படையில் சம்மந்தப் பட்ட அதிகாரிகளுக்கு அதிகார கையளிப்பை செய்திருக்கிறேன் என கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்

வீட்டு உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள், நிறுவன தலைவர்கள், காணி உரிமையாளர்கள் அனைவரும் இதற்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என விண்ணப்பிக்கிறோம்.

ஏனெனில் எமது கவனக்குறைவால் இன்னொருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை அங்கிகரிக்க முடியாது.