புயல் அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு வர்த்தக சங்க அணுசரனையுடன் பொலிஸாரின் உதவி

ஹஸ்பர் ஏ.எச்_

சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மூதூர் வெருகல் பிரதேச பகுதிகளுக்கு (05)திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள் விஜயம் செய்தார்.

மூதூர் மற்றும் வெருகல் பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பிரரனர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான விடயங்கள் குறித்தும் அவர்கள் தமது வீடுகளில் மீள் குடியமர்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
முக்கியமாக சுகாதாரத் தேவைகளை வழங்கவும் , மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிவர்த்திக்கவும் ஆவன செய்வதாகவும் கூறினார்.