எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இந்த காற்றழுத்தம் தொடர்ந்துவரும் நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாகவும் ,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருப்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அடிப்படையிலும் மேடன் ஜூலியன் அலைவின் செல்வாக்கு காரணமாகவும் இந்த நிகழ்வு ஒரு புயலாக உருப்பெற வாய்ப்புள்ளது.
இதன்படி 24 ஆம் அல்லது 25 ஆம் திகதி திருகோணமலைக்கு கிழக்காக இது ஒரு புயலாக வலுப்பெற சாத்தியமுள்ளது.
இது புயலாக வலுப்பெற்றால் ஐக்கிய அரபு ராச்சியத்தால் பரிந்துரைக்கப்பட்ட சென்யார் என பெயரிடப்படும்.
இந்த கடல்நிகழ்வின் மேற்கு நோக்கிய நகர்வு பின்னர் வட- மேற்காக மாற்றம்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து கரையைக்கடக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்காரணமாக இலங்கையின்வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பதிவாக சந்தர்ப்பமுள்ளது .
இதன்போது எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையில் மழை நிலைமை வியாபிக்க தொடங்கும்.
இதில் ஒருநாள் மிகக்கனமழை பதிவாகலாம்.
24 ஆம் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கனமழை பதிவாகவும் சந்தர்ப்பமுள்ளது. எனவே பொதுமக்கள் இதுதொடர்பாக கடல்றொழில் பாதுகாப்பு மற்றும் பொருத்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


