திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாலர் பாடசாலைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

ஹஸ்பர் ஏ.எச்_

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் 2025 மாகாண ஒதுக்கீட்டின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாலர் பாடசாலைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (30) திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, பாலர் பாடசாலை பணியகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. சமூன் மஜூன், பணியகத்தின் அதிகாரிகள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.