விளிம்புநிலை இன சமூகத்திற்கான தேர்தல் இ-சேவை பயன்கள் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு மட்டக்களப்பில்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளிம்புநிலை இன சமூகத்திற்கு தேர்தல் இ-சேவைகளின் பயன்கள் பெற்றுக் கொடுக்கும் செயல் திட்டமானது தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் என்.ரேகன் ஏற்பாட்டில் இன்று (28) காலை 9.30 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

தேர்தல் இ-சேவைகள் பற்றிய அறிவை வழங்குவதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவும், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இணைந்து காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு இந்த தேர்தல் இ-சேவை தொடர்பான தெளிவுடுத்தல் வழங்கப்பட்டது.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட இளைஞர் சமூகத்தை மூன்று குழுக்களாகப் பிரித்து இ-சேவைகள் பற்றிய பிரயோக ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் இச்சேவையினை மேற்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதல் மற்றும் அடையாள அட்டை என்பன தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பணிப்பாளர். அருணிதமயந்தி, காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மெளஜூத், அரச அதிகாரிகள், கிராம சேவகர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் என கலந்து கொண்டனர்.