கணிய மணல் கூட்டுத் தாபன ஊழியர்கள் சத்தியாகிரக போராட்டம்!

——— ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை புல்மோட்டை கணிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என கோரி தொடர்ச்சியாக இன்றும் (27) திங்கட் கிழமை 14 ஆவது நாளாகவும் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் பெரிதும் பொருளாதார ரீதியாக தங்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டும் பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் உரிய துறை சார் அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுத் தரக் கோரி சத்தியாக் கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
“பல மில்லியன் டொலர்களை உருவாக்கும் LMSLநிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்காமல் மறுக்கப்படுவது ஏன்? ஜனாதிபதி அவர்களே இது உங்களின் கவனத்திற்கு” போன்ற சூலோகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.